உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Nov 30, 2011

Oct Nov 2011

கம்மல் தூலியில் கண் அசைத்து உரங்கி விளையாட இடம் கொடு


உன்னை காதலிப்பேன் என்று நினைக்கவில்லை
உன்னை ஏன் காதலிக்கிறேன் என்று தெரியவில்லை
உன்னால தான் காதல் புரிந்ததுனு சொல்ல மாட்டேன்
முன்பே எனக்கு காதல் புரிந்த ஒன்று தான்
உணர்ந்தது உன்னுடன் மட்டும் தான்


உன் முகம் போல் வேற் யார் முகமும் பசுமையாய் என் நினைவில் இல்லை


இதய தாமரையில் இனியவள் நீ வந்து அமர்ந்தாய்
இந்திரனும் அல்ல சுந்தரனும் அல்ல
எனினும் என் கரம் பிடிப்பாயோ


யாரோ ஒருவன்
யாரோ ஒருத்தியை
கற்பனை செய்து எழுதுகிறான்
அதை இசையமைக்கிறான்
யாரோ ஒருவன்
அதனை பாடுகிறான்
யாரோ ஒருவன்
அதை வேற் ஒருத்தியுடன்
மற்றொருவன் நடிக்கிறான்
அதை ரசிக்கிறான்
யாரோ ஒருவன்
இப்படி இல்லாமல்
உன்னை பற்றி ரசித்து
கவிதை எழுதும் காதலனாய்
என்னை மாற்றிய உன்னை
நினைக்காத நாள் இல்லை சகியே
என் ஷ்வேதமே


உன்னை பற்றி என்னிடம் பேசும் போது
சிதறிய சொற்களை கோர்த்தேன்
கவிதை என்கிறார்கள்
நீ பேசும் வார்த்தைகளை எப்படி சொல்வார்களோ


அவளை சந்திப்போமா என
அவளை தேடுகிறது கண்கள்
(@Forum Mall)


உடைந்த கண்ணாடியை  ஓட்ட வைக்க இயலாது
உடைந்த என் மனதை ஓட்ட வைக்க
உன்னால் மட்டும் முடியும்


உன் கண்ணில் காணாத கவிதை உண்டோ
உன் மனதில் காணாத காட்சி உண்டோ
என்னில் காணாத காதல் உண்டோ
       இனி நீ தாமதம் செய்ய காரணம் உண்டோ


அவஸ்தை என்பது அழகு


பெண்ணே! பரவசம் என்பது உன் பேச்சு
அதனை அள்ளி அள்ளி வழங்கு
பருக காத்திருக்கேன்


உனக்காக காத்திருந்த காலங்களை கவிதை எழுதியாச்சு
உன்னுடன் வாழும் நாட்களில் அதை பாடுவோம்


அவள் இரு கரம்
ஒரு விழி மறைத்தபின்
மறு விழி  கண்டேன்
அக்காட்சி உலக அழகு


என்னுடன் தீபாவளி இல்லையெனில்
எப்படி கொண்டாடுவேன் ??

பார்வை போதும் பயணம் பாவை உன்னுடன் என சொல்ல


அழகி நீ பேரழகு
பிள்ளை அழகு
கொள்ளை அழகு
சிலை அழகு
நிலை அழகு
விரல் அழகு
குழல் அழகு
அழகு என்று சொல்வதருக்கு
இடம் இல்லாமல் அழகு
நீ எனக்கு


உன் வளையல் உடைந்து கீரினாலும் வலிக்காது
உனை பிரிந்து யாசித்தாலும் ஆனந்தம் போதாது
நீ என்னுடன் வேண்டும்


உனை பற்றி எழுதுகையில் என் தட்டச்சும் ஓசை கொடுக்கவில்லை


நேற்று அவளை கண்டதில்
மனம் நாணம் கொண்டதில்
கண்கள் ஆனந்தம் கொண்டதில்
நேற்றை மறந்தேன்
இன்று உயிர் திரும்பினேன்
கனவை களைக்கிறேன்
புன்னகை புரிந்தேன்
கன்னத்தில் இரண்டு குழியடி
உன்னிடம் இருந்து திருடியதில் ஒன்று


கனவில் கொஞ்சும்
சலங்கை சத்தம்
செவிகள் கெஞ்சும்


உன் கரங்களில் படுத்து
உன் கைகளால் என் தலை பிடித்துக்கொண்டு
உன் மூக்கினால் உரசி எனை கொஞ்சும் போது
நான் படும் அவஸ்தை
சொல்லி மாளாது
சொன்னால் புரியாது
சொல்ல வார்த்தை நீ தரவில்லை
குழந்தை நான் புரிந்துக்கொள்


சிறப்பானது காதல்
சற்று சிந்தித்து பார்
சில நாள் வாழ்ந்து பார்
என்னுடன் சேர்ந்து பார்
மலராய் உணர்வாய்
சிறப்பானது காதல் 

Sep 30, 2011

September 2011

கவலை இல்லா வாழ்வு பட கஷ்டபடனும்


உனை எழுதி என் தமிழ் வரண்டதோ ?
என்று இரண்டாவது கேள்வி குறி என்னில்?
முதல் கேள்வி குறி நீ?


மழைத்துளியின் சத்தமோ? அல்லது
உனை நினைக்கையில் என்னுள் உள்ள
பல இதய துடிப்புகளின் சத்தமோ ?
மழை நிற்காமல் வெள்ளம்
வந்து மடிய நாட்டம் இல்லை.
மழை நின்று இலைகள் துளிர்ந்து
வசந்தம் வீச ஆசையடி ஷ்வேதா


கோடி விதைகள் விளைந்தாலும்
லட்சத்தில் ஒரு விதையாய்
முளைக்கும் நம் காதல் வளரும்


காதலிக்க கவிதை தேவையில்லை
காதலிக்கும் காலமே கவிதை 

Aug 31, 2011

August 2011

பயணம் துவங்கியது 
பச்சை தாவனியையை
பக்குவமாய் சிறிது இடை (ஆறு) 
தெரியும் அளவு உடுத்திக் கொண்டுள்ள
கேரளாவைக் காண வருகிறேன் 
அவளை கட்டிக்கொண்டு 
அங்கேயே இருந்து விடுவேனோ 
அல்லது மனம் கொண்டு காதல் கொண்டு 
கை விட்டு பிறகு விடு வந்து 
கவிதையாய் அழுவேனோ 
கேரளம் பதில் சொல்லும்


மலைகளில் மரமாய் இருந்தேன் 
மேகமாய் என்னை போர்த்திக்கொண்டு 
சுவாசம் தந்து பிறகு என்னை 
பிரிந்து சென்றது ஏனோ 


உன் வெள்ளிக் கொலுசு மணிகளை 
அருவியில் அள்ளி வீசினாயோ 


மழையே மழையே மாசில்லா மழையே 
காதலி மீதுப் பொழிகிறாயே 
காலம் போதுமோ 
வார்த்தை புரியவில்லை மொழி புரிகிறது இதன் பெயர் காதலோ?


ஒரு வாழ்வு 
அதனினுள் ஒரு பெண் 
எங்களுக்குள் காதல் கல்யாணம் காதல் 
எங்களுக்கு ஒரு குழந்தை
வாழ்க்கை செல்கிறது 
ஒரு நாள் குழந்தைக்கு கல்யாணம் 
என் மேல் தோள் சாய 
அவளுக்கு நேரம் கிடைக்கிறது
சில நாட்கள் கழித்து பேரப் பிள்ளைகள்

மறுபடியும் என்று அவள்   
என் மேல்
தோள் சாய்வாளோ ?    


அவளுக்கென்று ஒரு மனம் உண்டு
அதில் எனக்கென்று ஒரு இடம் உண்டு
அதற்கு ஒரு சாவி உண்டு
அது எங்கு ?


விழியோடு வழிந்த நீரை துடைத்து கொண்டேன்
மனதில் வடியும் குருதிதனை துடைக்க முடியவில்லை 


மழைத்துளிகளாய் இணைந்து  
சுந்தர அருவியாய் காட்சி தந்து
காதல் ஆறாய் நீண்டு  
அன்பெனும் கடலில் 
கலியாண படகில் 
செல்வோம் ஷ்வேதமே


நிற்காமல் பெய்வது மழையோ நினைவோ 
நனைந்து நனைந்து காய்ச்சல் வந்துவிட்டது


இதயத்  தாமரையே உன் இதழ்களில் 
தண்ணீர் துளிகளை தாங்குகிறாய் 
என் மென்மையான  மனதை தாங்க மாட்டாயோ   ? 

Jul 31, 2011

July 2011

மலையில் ஆங்காங்கே துளித் துளியாய்
பச்சையாய் துளிர்த்துள்ள
செடிகள் கொடிகள் நினைவுகள்.
சற்று தொலைவில் இருந்து
காணுகையில் அவை காதல்.
செழிப்பாய் உள்ளது சுகமாய் உள்ளது
வா இங்கு குடிகொள்வோம்


சுவாசம் கொண்டு வந்தவள்
நேசம் விதைத்தாள்
என்று அறுவடை செய்வாளோ


மின்சார கம்பியில் மழை பெய்தும் குளிராதவன்
மலர் கொடியே தவழ்கிறாய் மலர்கிறாய்
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை


உறவுகள் தொடரவில்லை
உறக்கம் தொடரவில்லை
ஒவ்வொரு பொழுதும்
உன் பெயர் மறக்கவில்லை


நினைவுகள் குறையவில்லை
நெஞ்சம் கொள்ளவில்லை
சில காலமாய்
கவிதை எழுதவில்லை


உதடுகளில் சொற்களில்லை  
சொற்களில் பிழையில்லை
நெடுங் காலமாய்
உன் முகம் இல்லை


நேசித்த பொழுது
மனம் சொல்லவில்லை
நெஞ்சம் கூறுகையில்
நங்கை ஏற்கவில்லை
பின் பேச உன் மனம் இரங்கவில்லை


நீ ஆம் என்று சொல்லும் நொடியில் இருந்து
ஒரு நொடி கால் தரையில் நிற்காது
ஒரு நொடி வாய் சிரிப்பதை நிறுத்தாது
ஒரு நாள் கண் உறங்காது
ஒரு நாள் முகம் செந்நிறம் இழக்காது
ஒரு நாள் சரீரம் ஆடாமல் இருக்காது
ஒரு நாள் மூளை சிந்திக்காது
ஒரு நாள் என்னை பிடிக்க முடியாது
ஒரு யுகம்  மனதில் கவலை எழாது
அந்த நொடி என்றடி ஷ்வேதா (என்றடா ராஜேஷ்)??

Jun 30, 2011

June 2011

கனவாய் உள்ளது
உன்மேல் காதலாய் உள்ளது


கனவுகளை காற்றோடு கடத்தி சென்றாயோ
கவிதைகளை கட்டிக்கொள்வாயோ
கண்மலரே காண வருகிறேன்


நேற்று நிலவோடு இருந்தாயோ?
இன்று நிலவாய் வருகிறாய்
நினைவில் கொள்கிறாய்
நெஞ்சம் நெகிழ்கிறாய்
நற்றமிழே நறுமுகையே
நேசிப்போம் வா


காட்சிகள் அனைத்தும் கனவாய் உள்ளதடி
கண் முன்னே கனவுகள் தோன்றுதடி
கமலமே கண் விழித்தாலும் உன் முகம்தான்
காலம் கடந்து செல்லும் காவியம் வேண்டாம்
காவியம் சொல்லும் கயல்விழி போதும்
உன் காமம் வேண்டும்
(குறிப்பு: குறுந்தொகை, திருக்குறள் போன்ற நூல்களில் காமம் காதலை மேற்கோள் காட்டும்)


விண்ணில் எங்கு செல்லபோகிறோம்
நாம் சந்திக்கத்தான்


நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
நிழல் ஒன்று
நிஜம் ஒன்று
என் நினைவு ஒன்று
அது நீ தான் அடி


மார்கழி மாதத்தில் குற்றாலத்தில் குளித்தால் எப்படி இருக்கும்?
அப்படி உள்ளதடி உன்னிடம் பேசுவது
உறைந்து விடுகிறேன்
பின்பு நடுங்குகிறேன்
ஆனால் புத்துணர்ச்சியாய் உள்ளது


வாழ்வில் பெண்ணிருந்தால்
உலகமும் மறந்து விடும்
உன் மேல் பேதைமை கொண்டால்
ஞானமும்  மங்கி விடும்
உன் பெயர் உச்சரித்தால்
கானமும் சுவைத்து விடும்
உன் விழி நோக்கினால்
இதயமும் நின்று விடும்
உன் சொல் கேட்டால்
நரம்புகளும் அடங்கி விடும்
உன் விரல் பட்டால்
ஊனும் கல்லாகிவிடும்


நினைத்தபொழுது நட்சத்திரங்கள் தெரிந்தால் நெஞ்சத்தில் காதல் என்று அர்த்தம்


சுவாசிப்பதும் உன்னை நேசிப்பதும் என்னை அறியாமல் நடக்கிறது


வாழ்வில் வண்ண வண்ணமாய் வசந்தங்கள் வீச எமது வாழ்த்துக்கள்.


நட்சத்திரப் பந்தலில்
வெண்ணிலா தீபம் கொண்டு
சூரிய வேள்வி முன்
திருமணம் செய்து கொள்வோம்
என் சகியே


விண்ணில் இடித்தாலும் விரிசல் விழுவதில்லை
பெண்ணே  மின்னலாய் தோன்றினாய் தூரல்கள் விழுந்தன
இடியாய் இடித்தாய் கவிதை மழையாய் பொழிகிறது


வேதனையில் சோலையில் சென்றால் வெயிலும் வேதாந்தம் பாடும்  (இது ஷ்வேதா பற்றியது அல்ல)


பிரிவென்பது இரவா
     பகல் எங்கே
மனமென்பது மேகமா
     மழை எங்கே
மெளனமென்பது மொழியா
     சொற்கள் எங்கே


நேரம் வரும் வேளை
நெருங்கி வருமோ
இளைப்பாற நிழல் தருமோ


பார்க்க ஆனந்தம்
பேச ஆனந்தம்
பழக ஆனந்தம்
சிரிக்க ஆனந்தம்
சண்டை ஆனந்தம்
கேட்க ஆனந்தம்
நினைப்பது ஆனந்தம்
நெகிழ்வது ஆனந்தம்
வாழ்வது பேரானந்தம்


காற்றில் ஆடும் கொடியின்  மனம் மகிழ்ச்சி கொள்ளுமோ துயர் கொள்ளுமோ


எத்தனை நாட்கள் பேசாமல் இருப்பாய்
     ஒரு நாள் என்னுடன் பேசுவாய்
அன்று உன்னுடன் பேச
     ஆவலாய் காத்திருக்கிறேன்


அன்பே என் நெஞ்சே
     ஆருயிர் சகியே
ஆர்பரிக்கும் அமைதி கொண்டவளே

      அழகாய் சிரிப்பவளே
மழலையாய் உறங்குபவளே
       மனம் நெகிழச் செய்பவளே

நித்திரை நேரம் குறைத்தவளே
        சித்திரை மாத சூரியனே
பரவசமே பாவையே
        என்னை ஏற்றுக்கொள்


உனை தாலாட்ட உள்ளங்கைகள்  போதுமா?      


கரங்கள் பிடித்து நந்தவனத்தில் செல்ல காத்திருக்கிறேன்


எத்தனை நாட்கள் கழித்து வானவில்லை பார்க்கிறேன்
ஏதேதோ எண்ணங்கள் தோன்றுகிறது


உன் அன்பு பஞ்சாய் வெடித்து என மேல் வீசுவது என்றோ ?


நீ மலரா? கொடியா?
ஓடையா? நதியா?
நிழலா? மரமா?
மழையா? இடியா?
வானமா? மேகமா?
என் அன்பா? காதலா?


வார்த்தை இருந்தால் உன்னை பற்றி பல வரிகள் எழுதுவேன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு வண்ண வண்ணமாய்
வரைந்திடுவோம் வாழ்ந்திடுவோம் நம் வாழ்க்கையை


நாம் இணையும் போது
மகிழ்ச்சியில் மத்தியில்
மௌனம் குடிக்கொள்ளும்


பேதைமை கண்டால் பாவை நீ காரணம்


எண்ணங்களை எழுத முடியவில்லை
காதலியையை காதலிக்க முடியவில்லை


பார்க்கும் முகம் அனைத்திலும்
      பாவை முகம் தெரிந்தால்
பார்த்திபன் அப்பாவை மீது
      பேதைமை கொண்டுள்ளான்
பராசக்தியே பாவையே
      பார்த்திபனை காண்பாய்


மெல்லிய மலரில் மேக நிழல் வீழ்கிறதே, புரியவில்லையா?


செல்ல மழையே உன்னில் நனைய உன் அனுமதி வேண்டுமா?


எழுதிய வரிகளின் நீளம்
நாம் வாழ்வின் நாட்களில் ஒன்று
தனியாய் எழுதமுடியவில்லை
தாமரையே  வா


இரவு கடற்க்கரை சாலையில்
மின் விளக்குகளின் வெளிச்சத்தில்
நானும் அவளும் நடப்பதை
கற்பனை செய்தேன்
அவ்வளவு அழகு


எமது திண்ணையில் சாய்ந்து கொள்ளும் தூணாய் இருப்பாய்
சாய்ந்து கொண்டு இருக்கும் பொழுது உயிர் துறவோமோ


நாட்களை தனியே நான் எண்ணுகிறேன்
நட்சத்திரங்களை எண்ண என்னுடன் வா


தாமரையே தாமரையாய் இருக்கிறாய்! அழகா?


அழும் குழந்தையின் வாய் மூடாதே 

May 31, 2011

May 2011

நினைக்காமல் இருக்க முடியவில்லை
நெஞ்சம் உன்னைக் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை
நா உன்னைப்  பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை


தேனாய்த் தவழ்பவளே
தீயாய்ச் சுவைக்கிறாய்
நிலவாய் வந்தவளே
நிழலாய் ஓடுகிறாய்
தென்றலாய் வீசியவளே
புயலாய்க் கடக்கிறாய்
காதல் என்ற போது
நட்பாய்ப் பழகினேன் என்றால்
கசப்பாய் உள்ளது
ஆனால மனம் வெறுப்பாயில்லை
அன்பாய் உள்ளது
நட்சத்திரங்களை  வேடிக்கை காண வெண்ணிலாவில் குடி கொள்வோம்
சிகரங்களின் அழகறிய இமயத்தின் சிகரத்தில்(உச்சியில்) குடி கொள்வோம்
பூவின் மணம் அறிய மொட்டுக்குள் குடி கொள்வோம்


உன் அன்பை அறிய மனதில் எனக்கோர்  இடம் கொடுத்துவிடு
விதி வெல்லும் முன் உன் விழி வென்றது


நீ அழகாய் இருக்கிறாய்


துளித் துளியாய்த் தூறல் விழுந்தாலும் தூறல் அழகு தான்
துவண்டுத் துவண்டுத் தூங்கி வழிந்தாலும் தூக்கம் அழகு தான்
விழித்தவுடன் உன் சோம்பல் அழகு தான்
வெட்கப்பட்டுச் சோம்பலை மூடிக் கொள்வதும் அழகு தான்
இவையனைத்தையும்  உன் அருகே ரசித்தவன் ராஜேஷ்
என் அருகில் இருந்து மாயம் செய்தவளே

தொலைவில் இருந்து தொல்லை தருகிறாய்
விழியில் இருந்து விந்தை செய்கிறாய்
விரல் கோர்க்க வா


என் கை விரல் பிடித்து உன்னைப் பற்றிக்
கவிதை எழுதிக் கொள்கிறாய்
காரணம் என்ன பெண்ணே
நீ என்ன அழகாய் இருக்கிறாயோ?
எனக்கொன்றும் என்றும்  அப்படித் தோன்றவில்லை


முதல் மழைத்துளி என்மேல் சிந்துமோ
முதல் எழும் அலை மடியாமல் என் கால்களைத் தொடுமோ
மழலையின்  முதன் முதல் அடி என் மார்பில் விழுமோ  (நடக்குமோ)
அதிகாலை உன் முதல் பார்வை என்மேல் விழுமோ
உன் மௌனம் என்னிடம் பேசுமோ


உன்னைப் பற்றி என்ன சொல்வது ?
ஒரு பொழுதும் நினைக்காமல் இல்லை என்று சொல்லவா ?


எது உற்சாகம் உச்சி வெயிலில் குச்சி ஐஸ்-ஆ?
அல்லது உன் புன்னகையோ ?


ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும் பொழுதும்
உன் முகம் தோன்றுகிறது


மரணம் என்பது முடிவல்ல முழுமை


தோழமை (தலைகள்) தாங்க தோள்கள் காத்திரு
காலங்கள் கடக்க கால்கள் காத்திரு
காவியம் படைக்க கை விரல்கள் காத்திரு
காதல் புரிய கண்கள் காத்திரு


அவளுக்கு அமலாவைப்  பிடிக்கும்
அமலாவை எனக்கும் பிடிக்கும்
அவளை எனக்குப் பிடிக்கும்
அவளுக்குப் பிடிக்கும் என்பதால்
அமலாவை இன்னும் அதிகமாய்ப் பிடிக்கும், எனக்கு


அர்த்தமில்லா எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள வார்த்தை தரும்
நாம் ஒன்று கூடி வையகத்திற்குப்  / வாழ்க்கைக்குப்
புது அர்த்தம் தருவோமா?


கல்லறையில் வந்து கடிதங்கள் படிக்கவேண்டாம் கண்மணியே
கண்முன்னே வந்துவிடு காதோடு பேசிவிடு
தினம் தினம் உன் பெயரை ஜிசாட்டில் காண்பதே ஆனந்தம்
உன்னுடன் நாளும் பழகுவது பேரானந்தம்


இரவு பொழிந்தாலும் உறக்கம் பொழிவதில்லை
கற்பனைகள் பொழிந்தாலும் காதல் நீ பொழிவதில்லை
நினைவுகள் பொழிந்தாலும் நிந்தன் நெஞ்சம் பொழிவதில்லை
மௌனம் பொழியும் பெண்ணே என் மீது சொற்கள் பொழிந்துவிடு


நிலவு:
உன்னைக் காண ஆயிரம் நிலவுகள் வந்ததடி
எனக்காக மற்றவையாவும் விண்ணில் இருந்து மறைந்ததடி

நான் தற்கொலை செய்து கொள்வதை நீ ரசிப்பாய் என்றால் நீர்வீழ்ச்சியாய் வீழ்வேன்

அருவியின் கூற்று:
தரையில் வீழ்ந்து சிதறினாலும் என் காதல் ஆறு போல் நீண்டு உன்னிடம் சேரும்


 என் அன்பு மழைத்துளி  அல்ல விதை.
 மரமாய் வளர்ந்து பூக்கள் மலரும்.
 ஆனால் சூரியனாய் நாளும்
 என்னைக் காண நீ வரவேண்டும்

Apr 30, 2011

April 2011

வாழ்க்கை எளிமையானது
உன்னுடன் அழகானது


எமது பயணம் சிறப்பாய் இருந்தது
அவளையும் பார்த்திருந்தால் அழகாய் இருந்திருக்கும்


சுந்தரச் சித்திரமாய் வந்த பெண்ணே
சிறகுடன் வா
செவ்வானம் தாண்டிச்  செல்வோம் வா
செழுமையான வாழ்க்கை காண்போம்


என் சுவாசக் காற்று அவள் சிந்தையில்
செல்லமாய் சுட்டியாய்
ஒரு கொட்டு
 கொட்டியதால்
அவள் விழித்தெழுந்தாளோ?


பேரொளியுள்ள உன் புன்னகையை எதிர்த்துப் போராடப் போராளியில்லை
ஒலியில்லா உன் புன்னகைக்கு எதிரொலி உண்டு
என்றென்றும் பேணிப் பார்த்துக்கொள்கிறேன் என்னிடம் கொடுத்துவிடு
தொட்டுவிடுவேனோ என்று நினைத்தாயோ தொலைவிலேயே நிறுத்திவிட்டாய்
தொல்லை தர மாட்டேன் தொண்டாற்றிக் கடன் தீர்க்கிறேன்
தங்கத் தாமரையே இனியும் தாமதம் செய்யாதே


தங்கத் தமிழச்சியே  தரணியில் வந்தவளே
தாமரைப்பூ குளத்தில் தவழ்பவளே
நெஞ்சத்தில் நேசம் விதைத்தவளே
நெருங்கி வந்த பொழுது நெருப்பாய்க் கொதித்தாயே!


என் நெஞ்சம் காணும் வாழ்க்கை
உன் கையில் உள்ளது
உன்னைக் கைப் பிடித்துச் செல்ல
கரங்கள் காத்திருக்கின்றன
காலம் சென்றாலும் - அவை
கனவுகளை எடுத்துச் செல்லவில்லை
என் கனவுகள் கற்பனைகள் அன்று
உன்னுடன் கண்ட வாழ்க்கை
கண்ட கனவுகளைக் காண
வாழ்நாள் போதாது
போதிய காலம் இல்லை
பொன் மகளே வா!
பூஞ்சோலையில் காத்திருக்கிறேன்
பௌர்ணமிக்குள் வா!!
கனவுகளைக் கொண்டாடலாம்.


கண்ணீர் கலந்து கடல் நீர் கரித்ததோ?
சுவாசம் முகர்ந்து பூக்கள் மலர்ந்தனவோ
உரை கேட்டுக் கிளிகள் பேசினவோ
நீ விழித்ததனால் கதிரவன் உதித்தானோ?


கடலில் முழ்கி மறைந்தாலும்
மலையின் பின் மறைந்தாலும்
கண்ணே நீ என்னை நினைத்த
மறு கணம் உதிப்பேன்


மாசியிலும் ஐப்பசியிலும் மழை
மனம் குளிரச் செய்யும் - மங்கையே
உன் சிரிப்பொலியைச் சொன்னேன்


காற்றின் பருவம் அறிந்து பூக்கள் மலரும்

என் மனம் உணர்ந்து நீ மொழிவாயோ ??


Apr 1, 2011

பாலை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
விண்ணில் நட்சத்திரங்கள் இருப்பது பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மழலையின் உறக்கம் தனை ரசிக்க முடியவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மலைகளில் பயணம் செய்யும் பாதை பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
உன் மௌனம் தனை ஏற்க முடியவில்லை

வெண்ணிலவே மேகத்துள் ஒழிந்து கொண்டாலும் உன்னை நான் அறிவேன்
மேகம் சிறிது நாழிகை கழித்து உன்னிடம் இருந்து விலகி செல்லும் கைவிடும்
என் கண்பார்வையில் தான் இருப்பாய்
என்னுடன் வந்துவிடு என்றும் உன்னை விலகி செல்ல மாட்டேன்

நீ ஒரு துளி எடுத்து சவரில் தெளித்தாலே ஓவியம்!!

குறுகிய சாலையில்
பூமரம் கண்டேன்.
நிலவை நோக்கி
கடலில் நீந்துவதா
நிழலில் நிற்பதா.
நேற்றோர் முடிவெடுத்தேன்
முயற்சிக்கிறேன்
முறிவேனோ தெரியவில்லை
முந்நூறு நாட்கள்
பின்பு காண்போம்

ஆயிரம் கவி எழுதினாலும்
அர்த்தம் ஒன்று தான்
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு
பிடிச்சிருக்கு
நிறைய நிறைய
நிறையா பிடிச்சிருக்கு

ஒரு நாளைக்கு நாலு வாட்டி பசிக்குது
எட்டு மணிநேரம் தூக்கம் வருது
தினமும் பொறுமையா பல்லு வேலக்கி
நிதானமா குளிக்றேன்
அரை மணிநேரம் பேப்பர் படிக்கறேன்
விட்டத்த பாத்து யோசிக்கிறேன்
யாருக்காது போன் பன்னி பேசறன்
இதேலான் நல்லாவா இருக்கு
வயசு பசங்க பன்ற காரியம் மாதிரி யார் இருக்கு

மழைத்துளி ஈரம் காற்றில் ஒட்டிக்கொள்ளும்
உன் சிரிப்பொலி என் நெஞ்சில் குடிகொள்ளும்

நேற்று நிலவை கண்டேன்
நிலவில் உன்னை கண்டேன் - உன்
நிழலில் என்னை கண்டேன்

ஆகாய வெண்ணிலாவில் அர்த்தமில்லை
அஹிம்சை முறையில் வெற்றியில்லை
உன் தாண்டவம் கண்டால் -தாரை
தாரையாய் கண்ணீர் வருகுதடி
உன்னுடன் ஆனந்தம் காண
மனம் ஏங்குதடி - மந்திரச்
சொல் உதிர்வாய்ப் பெண்ணே
மாலை இட்டுக் கொள்வோம்

ஓவியம் பழகலாம் காவியம் பழகலாம்
ஆனால் காதல் நீ இல்லாமல் பழக முடியுமோ ?

மருதம்

இலைகள் துளிர்ந்து
விழிகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

பூக்கள் மலர்ந்து
சுவாசம் முகர்ந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

கிளிகள் பேசி
செவிகள் சிவந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

மழலைகள் சிரித்து
உதடுகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

நாம் கைகோர்த்து
மனங்கள் இணைந்து
நமது உள்ளம் பரவசம் கொள்ளட்டும்

கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளைகளில் நான்
துள்ளி துள்ளி வருகையில்
இருபுறமும் நின்று வழி விடுவார்கள்

ஆனால் நீ
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை என்று
நிற்காமல் விழி அசைக்கிறாய்
விழியில் வீழ்ந்தேன்
இனி என்னில் வலுவில்லை
நல் விடை கொடு ஷ்வேதமே

ஓர் காவியம் தரும் அணைத்து இன்ப துன்பங்களையும் உன் பெயர் தருகிறது
இச்சுந்தர காவியத்தை (உன் பெயரை) வாசிக்கிறேன்,  சுவாசிக்கிறேன், உச்சரிக்கிறேன் கணக்கில்லாமல்
ஆயினும் இன்று வரை உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை கமலமே!

என்ன எழுதுவது என்று அறியேன்
எதை எழுதுவது என்று அறியேன்
எண்ணி பார்க்கிறேன் எதுவும் தோன்றவில்லை
இப்புலம்பலையும் எழுதுகிறேன்
தேரில் வந்தாயே தாமாரையே எப்பொழுதும் சூரியனை நோக்கிக்கொண்டு
உன் புன்சிரிப்பில் புலனைந்தும் நின்றதடி
இடைவேலி நம் மனதிற்கு மட்டும் அல்ல
மேகத்திற்கும் கடலிற்கும் தான்

மேகத்துள் மறைந்து கொண்ட நீரை போல்
இவ்வலையுகத்தில் மறைந்து கொண்டேன் அடா

முல்லை

உன் நிழல் இந்த வலையில் விழ என்ன பேறு செய்ததோ

மாலை அவள் வரவில்லை
மனம் இம்மெய்தனை ஏற்கவில்லை
மதி இயங்கவில்லை
மணமகள் மணவாளனை மெச்சிக் கொள்ளவில்லை
மனித குலத்தில் மற்றவர் யாவும் பிடிக்கவில்லை

செல்லும் இடம் எங்கும் எட்டுத்திசையிலும் எட்டிப்பார்க்கிறது என் கண்கள்.

உன் கையில் கையால் ஒரு பிடி சோறு கிடைக்குமா கண்மணியே?

மணமறியாது குணமறியாது உண்கிறேனடி
வானமறியாது பூமியறியாது குதிக்கிறேனடி
பாசமறியாது நேசமறியாது பழகுகிறேனடி
மொழியறியாது எழுத்தறியாது பேசுகிறேனடி
ராகமறியாது தாளமறியாது பாடுகிறேனடி
மழையறியாது வானவில் அறியாது மயிலாய் ஆடினேனடி
இரவறியாது பகலறியாது மழலையாய் இருக்கிறேனடி ஷ்வேதமே!

பார்ப்பதில்லை பார்ப்பதில்லை பாறேங்கிலும் உன்னை பார்ப்பதில்லை
நோக்குவதில்லை நோக்குவதில்லை ஒரு நொடி கூட உன்னை எதிரே நோக்குவதில்லை
பேசுவதில்லை பேசுவதில்லை உன்னுடன் மனதிற்குள் பேசுவதில்லை
கேட்பதில்லை கேட்பதில்லை உன் சுந்தர தமிழ்தனை கேட்பதில்லை
உண்ணுவதில்லை உண்ணுவதில்லை உன்னை நினைத்துக்கொண்டு உண்ணுவதில்லை
செய்வதில்லை செய்வதில்லை உன்னை பற்றிய சிந்தனையோடு ஒரு வேலையும் செய்வதில்லை
நித்திரையில்லை நித்திரையில்லை நின்னை நினைத்துக்கொண்டு நித்திரையில்லை
எழுதுவதில்லை எழுதுவதில்லை உன்னை பற்றி ஒரு கவி கூட எழுதுவதில்லை
தேடுவதில்லை தேடுவதில்லை கடை ஊழியர் அடையாள அட்டையில் உன் பெயர் தேடுவதில்லை
கொள்வதில்லை கொள்வதில்லை வெண்கமலத்தின் மேல் காதல் கொள்வதில்லை
சொல்வதில்லை சொல்வதில்லை இனி ஒரு பொய்யும் சொல்வதில்லை

என் இதயத்தை எடுத்து ஒரு வினாடி(விநாடி) காகிதத்தில் வைத்தால் உன் முகம்தனை ஓவியமாய் காண்பாய்

கார்மேகமாய் கனவில் நினைத்துக்கொள் அடை மழையாய் வீசுவேன்
கருங்குயிலாய் கனவில் நினைத்துக்கொள் கானமாய் இசைப்பேன்
களவாணியாய் கனவில் நினைத்துக்கொள் உன் மனதை களவாண்டு விடுவேன்
காதலனாய் கனவில் நினைத்துக்கொள் உன் பாது காவலனாயும் இருப்பேன்

கால்கள் கடக்கும் இடங்களை(மற்றும் நாட்களை)  பயணம் என்றால், மனம் சுற்றும் நாட்களை என்னவென்று கூறுவாய் ?

(தபுக்குனு பேசினு/தூங்கினு இருக்கும் போது தாலிய கற்றது ஓல்ட் பேஷன்)
உங்க அப்பாக்கிட்ட பேச ::: நறுக்குன்னு ரத்தம் வர மாதிரி உன் உச்சம் தலைல கொட்டினா உங்க அப்பா வந்து என் கிட்ட பேசுவாருல ??....

என் கவிதை புரியவில்லை என்றாலும் முன்பு போல் என்னுடன் பேசுகிறாய்
என் காதல் புரியவில்லை என்றாலும் என்னுடன் முன்பு போல் போல் பேசடி

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு  என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!
இது தகுமோ? இது முறையோ? இது தர்மம் தானோ?

பல பேர் இருந்தா எல்லார்கிட்டையும் பேசி புரியவெச்சு ஒர்த்தவங்க கிட்ட சம்மதம் வாங்கறதுக்கு நிறைய நேரம் ஆகும்.
அதே, ஒன்னே ஒன்னு இருந்தா அவங்க கிட்ட பேசி புரியவெச்சு பழகறதுக்கு நிறைய நேரம் இருக்கும். தினமும் இதை போன்ற மனப்பான்மையோடு ஒர்த்தவங்கள நினைச்சுனு இருந்தா கண்டிப்பா அவுங்க உங்களுக்கு கிடைப்பாங்க.நாளை சந்திப்போமா

எனக்காக உனது விழியில் ஒரு துளி என்றால்
மரண படுக்கையிலும் உறங்குவேன் கண்மணியே

உன்மேல் சொட்டுச் சொட்டாய் சிந்துதடி வானம்
சொன்னால் நம்புவாயோ? ஒவ்வோர் துளியிலும் அன்பை கலந்துளேன் அடி

முதலில் நட்பை இழக்க கற்றுக்கொண்ட பிறகு காதலியிங்கள்

மாதமோ தை 
இந்நேரமோ மெய்
உன் கோபம்மோ பொய் 

மழலையை ரசித்தேனே மனம் சரிந்தேனே

அவரவர் வாழ்க்கையில் அவரவர் பயணிப்போம் என்றாள், ஆயினும் வாழ்க்கை என்பது யாதென அறியேன் நானே, விடைதேடி வந்தேன் இங்கே. கிட்டுமா என்று சற்றுப் பொருத்திருந்து பார்ப்போம்

வெள்ளிக்கம்பலத்தில் வெண்ணிலா மிதந்து வந்தால்(வந்தாள்)
வேங்கை அவன் காதல் கொள்வானோ
காவியம் எழுதுவானோ அவள்
கயல்விழி கதை சொல்லுமோ
காலம் பதில் சொல்லுமோ

அடைமழை கண்டேன் அனல்குளிர் கண்டேன்
ஆயினும் அன்பே நின் அன்பின் கண்ட பரவசம் இவையில் காணோம்

வெண் தாமரையே வாஞ்சி நிலவே
திருவாய் மலர்வாய்

வைரப் பாலைவனத்தில் நிற்கும்
கருகிய முற்களில் இலை துளிராதோ
காட்டுத்தனமாய் துளிரும்
நம்பிக்கையுடன் சுவாசிக்கிறேன் நறுமுகையே

உணர்ந்த தருணமே இழந்தேன்
என் நெஞ்சம் எங்கேன அறிவாயோ?

எங்கிருந்து வந்தாய்
எமலோகத்தில் இருந்து வந்தாயோ
இப்படி கொல்கிறாய்

மழைத்துளி பனித்துளியை சுட்டதடி
பனி மெல்ல கறைந்து மடிந்ததடி
மேகம் அழுது மடிந்ததடி
மழையே உருக்கொண்ட மேகமுடன் சேரவில்லை
பனியிடமும் சேரவில்லை
நீரோடையாய் எங்குசெல்கிறாய் கண்மணியே

நெய்தல்

எதுகையும் மோனையும்
உன் எழில் கொஞ்சும் சிரிப்பும்
கைகோர்த்தால் கவிதையடி

பனி காலைப் பொழுதில்
இலையில் பனி துளியில்
உன் முகம் தெரிந்தது

கோடையில் மண்ணில்
இரவில் நடு இரவில்
நடுநிசியில் பனியில்
நதியில் வழியில்
வழியில் பரிசலில்
பரிசலில் முழுமதியில்
கரையில் அருகில்
அருகில் மலையில்
மலையில் மலைகுகையில்
மனதில் விண்ணில்
என் எதிரே உன் விழியில்
வெண்ணிலாவில் மாலையில்
மர நிழலில் (கைகோர்த்து)   உலாவையில்
மழையில் குடையில் நனைகையில்
தனிமையில் உன் சிரிப்பில்
கண்ட அமைதியில் பேரானந்தம் அடி

மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
அவன் கண்ணில் நீர் வழிய
இருவர் உள்ளமும் உருக
சட்டென்று சில்லென்ற மழையில் நனைய
என இருவரின் அறுபதாம் மணநாள் நிகழ்ந்தது!

அய்யோ கடவுளே, இக்கணமே இம்மண்ணிலே மீண்டும் நான் பிறக்கிறேன், அவளுக்கு மகனாக - உடனே என்னை கொன்று விடு (அத்திருகாரியத்தை அவளிடம் விட்டு விடு)

@2088 வீடருகே உள்ள ஓர் பூங்காவிருக்கு வந்தேன்
அங்கே மரங்கள் அமைந்த பாதையில் நடந்தேன்
 மர நிழல் கொண்ட ஓர் திண்ணையில் இளைப்பாறினேன்
சிறிது நேரம் கழித்து சில பூக்கள் என் அருகில் விழுந்தன
மரங்களிடம் கேட்டேன் 'எதற்கென்று?"
"மரங்கள்" அவளின் கல்லறையில் சேர்த்துவிடு?"

ஏக்கங்கள் வந்ததடி ஏனெனில்
உன் மேல் எண்ணங்கள் வந்ததடி

பொய் அவள் விழியினிலே
கள்ளம் அவள் சிரிப்பினிலே
கார்மேகம் அவள் மழையினிலே
நிலவு அவள் நடுநிசியினிலே
கற்பனை கவிஞனின் வரியினிலே
மழலை அவள் உள்ளம்தனிலே
மூதாட்டி அவள் அறிவுதனிலே
மின்னல் அவள் நெற்றியினிலே
தேன் சுவை அவள் நாவினிலே
நேசம் அவள் பேச்சினிலே
வாள் அவள் பார்வையினிலே
என் உள்ளம் அவள் நினைவினிலே
அவள் என் சுவாசம் என் மூச்சினிலே
பொங்குவாள் என் நெஞ்சினிலே
நான் பைத்தியம் அவளை பற்றி எழுதுவதிலே
நேற்று அவள் என் கனவினிலே
இன்று அவள் என் நினைவினிலே
நாளை நாங்கள் கல்லறையிலே

உள்ளங்கையில் உன் முகம் தெரிந்தது
உற்றுப் பார்க்கையில் ஓர் பொழுது கடந்தது

வாணி வந்தாள் வென்று சென்றாள்
விலகிச் செல்கிறாள் வேங்கையில் நான் என்ன செய்யேன்?

மின்னல்கள் சிரிப்பது எப்பொழுது இடியுடன் கூடிய மழை பொழிவது எப்பொழுது

நடுவானில் உன் மீது பொழிந்தாலும்
நட்சத்திரமாய் பொழிவேன் அடி
நாடு கடந்து வந்தே அடி
நறுமுகையே நெஞ்சம் முழுவதும் நீ தான் அடி

என்ன புடிச்சிருக்கா ?
புடிச்சிருந்தா சொல்லு
அன்றைய நாள் காதலிக்கலாம்
மறுநாள் கலியாணம் செஞ்சுக்கலாம்

என்னுள் எங்கிருக்கிறாய் சொல்லிவிடு
எண்ணும் எண்ணமாய் ?
பார்க்கும் பார்வையாய் ?
கேட்கும் ஒலியாய் ?
உண்ணும் உணவாய்?
சுவாசிக்கும் மூச்சாய் ?
எழுதும் கவிதையாய் ?
மனதில் மகிழ்ச்சியாய் ?
இதய துடிதுடிப்பாய் ?
வழிபடும் கடவுளாய் ?
பேசும் செந்தமிழாய் ?
நாம் கொஞ்சும் குழந்தையாய் ?
குருதியில் தாய்ப்பாலாய் ?
வாழ்வில் வாழ்வாய் ?

வெண்ணிலா மேக படி இறங்கி பூமியில் சென்றது
(on seeing in the side mirror of the bus while she got down)

உன் கன்னக்குழியில் என் கண்களை வைத்தேன்
உன் இமைகளில் என் இதயத்தை வைத்தேன்

உன்னிடம் நீ போராட வேண்டும் என்றால் காதலித்துப்பார்

உனை காண கண்களை படைத்தவன்
எதற்க்காக இதயத்தை படைத்தான் ?

நீ அடித்தால் மறு கன்னத்தையும் காண்பிப்பேன்

நிலவில் ஒளி படைத்தவன் உன் மனதில் ஈரம் வைத்தானோ ?

நீராய் வந்தாய்
நெருப்பாய் வந்தாய்
நறுமுகையாய் வந்தாய்
நடுநிசியில் வந்தாய்
நெற்கதிராய்  வந்தாய்
நித்திரையாய் வந்தாய்
நிறைமனதாய்  வந்தாய்
நாணமாய் வந்தாய்
நாதமாய் வந்தாய்
நவமணியாய் வந்தாய்
நிகரேது என வந்தாய்
நட்சத்திரங்களாய் வந்தாய்
நிலவாக வந்தாய்
நிழலாக வந்தாய்
நெஞ்சத்தில் வந்தாய்
நீளமேகமாய் வந்தாய்
நீளதாமரையாய் கையில் வந்தாய்
நிம்மதியாய் வந்தாய்
நினைவாய் வந்தாய்
நெற்றிகண்ணாய் வந்தாய்
நெருங்கி எப்போது வருவாய் ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

என்ன நினைத்தேனோ
ஏது நினைத்தேனோ
எண்ணங்கள் ஏதும் புரியவில்லை

இரு விழிகள் ஒர் பார்வைக்கு
இரு மனம் ஒர் வாழ்க்கைக்கு

நீ சிரித்தால் கொள்ளை அழகு
வாய் விட்டு சிரித்தால் உயிர் கொல்லும் அழகு

உன் மௌனம் சுந்தர கவிதை சுறக்கும் உற்று

நின்னை கண்டு நாணம் செவ்வானத்தை தண்டித்து

கையில் ஏந்தி மலையேறி உனை எட்டி பார்க்கிறேன் மானே
எங்கு மறைந்து கொண்டாய்
(on sunrise)

இன்று உன் அருகில் உன் மூச்சு காற்றை சுவாசித்த போது முதன் முதலாய் தாய்ப்பால் அருந்திய பரவசம் உணர்ந்தேன்

கண் விழித்துகொண்டிருந்த பொழுது விழியில் மறைந்து கொண்டாய் ?
கண் மூடி கொண்டு உறங்குகிறேன் உறக்கம் வரவில்லை
என்ன செய்ய போகிறாய் என அறியமுடியவில்லை
நீ செய்யும் மாயைகள் எத்தனை கோடி இன்பம்
கண் விழிக்க ஆசை இல்லை பொன்னமா

கலவரம் உண்டு
கானல் உண்டு
களிப்பு உண்டு
களவு உண்டு
கோவம் உண்டு
கண்ணியம் உண்டு
கோர்வை உண்டு
கசப்பு உண்டு
கற்க உண்டு
காத்தல் உண்டு
காலம் உண்டு
காத்திருப்பு உண்டு
கடமை உண்டு
கட்டுப்பாடு உண்டு
கனவு உண்டு
கற்பனை உண்டு
கவிதை உண்டு
இவை யாவும் காதலில் உண்டு

மின்னலினில் உன் முகம் எப்படி தெரியும். நீ முக கண்ணாடி பார்ப்பாயோ ?

உன் நினைவு வருகையில் நித்திரை இழந்தேனடி
உன் அருகில் வருகையில் உள்ளம் குளிருதடி
உன் கண் நோக்கினால் கள்வெறி கொண்டேனடி
நீ என் பெயர் உச்சரிக்கையில் நினைவிழந்தேனடி

தனியாய் உனது பீம்மமாய்
ஒரு துளியாய்
உன் இலையில் இருப்பேன் தாமரையே

குறிஞ்சி

எப்ப பாத்தாலும் வானம், பூமி, நிலா, நிலம், காற்று என்று எழுதி சலிப்பு வந்து விட்டது .. அதனால் வேறோர் களத்தில் உனக்காக எழுதுகிறேன்

கடை வீதியில் கால் முளைத்து காலி ப்ளவரும் உன் பின் வரும்

இலையுதிர் காலத்தில் இலை குற்று:
பல்லாயிரம் இலைகளில் என்னை மட்டும் காற்றாய் வந்து கைபிடித்து கூட்டி சென்றாய்,  வழியில் நாம் ஆடிய நர்த்தனம் நெஞ்சம் மறக்காதடி,  விண்ணில்  நம் வாழ்வை எப்படி சொல்வேன் அடி!

மொத்தனும் குத்தனும் 
மொத்தனும் குத்தனும் 
மொத்து மொத்துனு மொத்தனும்
குத்து குத்துனு குத்தனும் 

பழைய போர்வையில் வெள்ளி முத்துக்கள்

உள்ளம் உனக்கென துறந்தேன்
உயிர் உனக்கென துறவேன்
உன் செம்பவள வாயினால்
என்னிடம் ஓர் வார்த்தை மொழிவாயோ ?

டேய் அவள கொல்ல போறேன் டா

விடியலில் விழி விரிக்கையில் கமலமே உன் முகம்

காலையில் கண் விரிக்கையில் கமலமே உன் முகம்

உன் நினைவில் என்னை நிறுத்திக்கொள்வாயோ
என் எண்ணங்களை ஏற்றுக்கொள்வாயோ
உன் மரணத்தில் என்னை மன்னிப்பாயோ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

யார் தொடங்க என்று இருவருக்கும் தெரியவில்லை

மௌனத்தை இருவரும் தொடங்கி விட்டோம்
இருவருக்கும் பிடிக்கவில்லை

வள்ளுவன் வெண்பாவை தவிர வேறேதேனும் எழுதினால் அது உன்னை பற்றி தான் இருக்கும்

பிறப்பில் இறப்பை அறியேன்
இறப்பில் மறுபிறப்பை அறியேன்
விண்ணில் நட்சத்திரங்களை அறியேன்
மண்ணில் மாந்தர்களை அறியேன்
வானவிலின் வண்ணங்களை அறியேன்
நேற்று உன்னை அறியேன்
இன்று உன்னை மட்டும் அறிவேன்
நாளை நீ எனக்கா என அறியேன்

"பஸ்சில் இடம் கொடுத்த நங்கையின் மனதில் இடம் பிடித்தாயா?" என கவிதையாய் கேட்டாள் என் பாட்டி.

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

கடல் உன் கரங்கள் அளவு நீளம் அடி
இமயமலை உன் காலளவு உயரமடி
நிலவு உன் முகம் அளவு வட்டம் அடி
அகில லோகமும் உன் உள்ளம் அடி

அஞ்சாமல் அஞ்சல் எழுதினேன்
ஆயிரம் எழுதினேன் ஆருயிரே
ஆயினும் அன்பே அஞ்சல் பெட்டியில் ஒன்றை கூட சேர்க்கவில்லை

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

சூரியனும் சமூத்திர முக கண்ணாடியில் சில நாழிகை முகம் பார்க்கிறான்
ஆனால் சமூத்திரமோ நாணம் கொண்டு செந்தழலாய் அலைந்தது

பேரமைதி

நம்ம ரசிச்சு ரசிச்சு நேசிச்ச பொண்ணு
நம்மகிட்ட முகம் கொடுத்த பேசலானா
அந்த வலி இருக்கே, நம்மள பொறட்டி எடுத்துரும்
வேலை இல்லனா வீட்டுக்கு போய் தூங்க பிடிக்காது,
யார்கிட்டயும் பேச பிடிக்காது,
அப்படியே போன்'ல பேசினா ரெண்டு நிமிஷத்துல
போன்'எ வைக்க தோனும்,
நண்பன், நண்பன் டா'னு - இப்ப நீ தான் டா முடிவு எடுக்கணும்,
வேலைய பாத்துனு போ'னு சொன்னா,
மனசு சுத்தமா காதுல வாங்காது, போடான்னு சொல்லும்,
இந்த விஷயம் தெரிஞ்ச நட்பு வட்டாரத்துக்கு கிட்ட
இத பத்தி ரொம்ப கேள்வி கேக்காதனு சொல்லிடும்
மூனு மாடிய பதினச்சு வினாடில ஏறுகிறவன்
பொறுமையா மூச்சு விட்டுன்னு தலைய தொங்கப் போட்டு
பாதி கால் வெச்சு ஒரு ஒரு படியா ஏறுவான்
என்ன ஆனாலும் அவ மேல கோவம் மட்டும் வரல
இன்னும் அழகா இருக்கா மனசு நிறையா இருக்கா

என் வலி என்னோட இருக்கட்டும் எனக்கு இது புடிச்சிருக்கு

என் கண் பாரடி கிளியே
என் கண் பாரடி கிளியே
என் மீது ஏன் கோபம் கொண்டாயோ
ஏன் மறுத்தாயோ
எண்ணி பார்த்தால்
எள்ளளவும் தோன்றவில்லை
என் ஏழுலகமும் நீ தான் அடி!
என்றும் உன்னை மறவேன் அடி
என் கண் பாரடி கிளியே !

துயிலிலும் துள்ளி துள்ளி வரவில்லை
நேரிலும் தள்ளி தள்ளி செல்கிறாய்

நிலவில் என்னை நினைத்துக்கொள்
மண்ணில் என்னை மணந்துக்கொள் அல்லது
என் மரணத்தில் என்னை மண்ணித்துவிடு

Mar 29, 2011

புயலுக்குப் பின் அமைதி


உன்னால் என்னுள் கருவாயிருந்த கவிஞனை கை பிடித்தாயோ? 
சில யுகமாய் கவிதை எழுதவில்லை!

வியந்தேன் வியந்தேன் வியந்தேன்
வியக்க வியக்க வியந்தேன்
என்னுள் என்ன விந்தை செய்தாய் என வியந்தேன்
விடியும் வரை வியந்தேன்

விண்ணில் வெண்ணிலாவை கண்டு வியந்தேன்
வெண்ணிலவை உன் குண்டலமாய் கண்டு வியந்தேன்

விண்ணிலிருந்து விழும் பூக்களை கண்டு வியந்தேன் 
அவை உன்னக்கென என்பதை உணர்ந்து வியந்தேன் 

வானவிலின் வண்ணங்கள் கண்டு வியந்தேன்
அவ்வண்ணங்கள் உன் கூந்தலில் மிளிர்வதை கண்டு வியந்தேன் 

வாரணங்களின் தந்தங்கள் கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் கை விரல்கள் கண்டு வியந்தேன்

வேகமாய் சிறகடிக்கும் பறவைகள் கண்டு வியந்தேன்
பெண்ணே உன் இமைகள் சிமிட்டுவதை கண்டு வியந்தேன்

வனத்தில் பசுமை கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் அமைதி கண்டு வியந்தேன்

வாயிலில் திண்ணை கண்டு வியந்தேன்
திண்ணையில் நாம் பழகிய காலம் கண்டு வியந்தேன்

விடியலில் செவ்வானத்தை கண்டு வியந்தேன்
உன் துயில் களைத்ததற்கு கோபம் கொண்டாயோ என வியந்தேன்
அல்லது வேங்கை என் வருகையில் வெட்கம் கொண்டாயோ என வியந்தேன்

வீதியில் நாம் நடந்ததை வியந்தேன் 
என் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தாயே! வியந்தேன்!

வையத்தில் வானி(ணி) உனை வியந்தேன்
என்னுள் ஏன் என வியந்தேன்!

ஊர்ல அவன் அவன் ஆயிரம் Onsiteபோறான். அஞ்சு வருஷம் கழிச்சி மொத(முதல்)  Onsite கொரியா வந்து முதல் Testing  நான் பட்றப்பாடு இருக்கே ... அய்அய்அய்யோ

கவிதையும் வரவில்லை காதலும் வரவில்லை 
கலைமானே கண் மூடினால் உன் கண்கள் தான் கனவில் வருகிறது!

மச்சான் அழுக அழுகையா வருது டா

மச்சி அழுக அழுகையா வருது டி
ஓஹ்யோன் ஓஹ்யோன் ஓஹ்யோன் 

மௌனம்

இடியுடன் கூடிய மழை


இயந்திரமாய் இருந்த என்னை இயக்கிவிட்டாய் 
இயங்குகிறேன். இயங்காமல் இருக்க முடியவில்லை 

மயிலிறகு உன் மென்மையை உணர உன் மேல் வீசும் அடி  

உன் மென்மையை உணர பூக்களுக்கு உன் தலையில் இடம் கொடு. 
உன் மனதில் எனக்கோர் இடம் கொடு

என்னிடம் இருந்து விலகி இருந்தால் நான் உன்னை நினைக்க மாட்டேன் என்று நினைத்தாய் அடி. நான் யானை அடி. உன் நினைவொன்றே வாழ்நாள் முழுவதும் அதிர்வுகள் தரும். நீ என்னை கடந்து செல்கையில் என்னை நினைப்பாய். நான் இல்லாத பொழுதும் என் பேருந்து நிறுத்தத்தில் என்னை நினைப்பாய். என்னை நீ மறக்க மாட்டாய். உன்னை மறவேன் என்று நினைத்தாயோ. 
(Now I am incepted in your thought. It will grow. You cant stop)(note: on elephant. Trumpeting will reach long distances and elephants can sense even low freq. that is why if there is problem they trump)

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் 
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும் - வைரமுத்து

கடல் ஒன்று அலைகள் நூறாயிரம் 
நீ ஒருத்தி உன் நினைவுகள் பல்லாயிரம்

காலை பகல் இன்றி ஊர் ஊராய் சுற்றும் மேகங்கள் பூவுலகத்தை காப்பது போல் உன்னை காப்பேன் 

மேகம் கூற்று: 
என் நிழல் கூட என்னில் ஓட்ட வில்லை அடி. உன்மேல்(உலகம்) விழுகிறது 

என்னுள் இருந்தவனை வெளியேற்றி 
நீ உள்ளே சென்றாய் 

இன்று அவள் இடம் சொல்வேன்

என்னை சுற்றி உள்ள மனிதர்கள் எப்படி உன்னை விட்டு வைத்திருக்கிறார்கள், என்னக்காகவா ?

பண்பட்டவனும் படகில் பயணம் செய்தால் பள்ளத்தில் இறங்குவானடி 

தீபத்தில் திரியாய் இருப்பேன் அடி 
என்னை சுட்டாலும் உனக்கு உணவு கொடுப்பேன் அடி 
நாம் இருவரும் ஒரே தருணத்தில் உயிர் துறப்போம் அடி 
உன் தந்தை தன் தீபத்தில் இருந்து என்னில் ஏற்றும் நாள் எப்பொழுது

எறும்பு நீ மழையில் நனைந்தால் நான் காளானாக முளைப்பெனடி

யாரிடமும் தோன்றவில்லை 

நேற்று என்னை கொள்ளை கொண்ட உன் மௌனம்
இன்று என்னை தீக்குழம்பாய்சுட்டெரிக்குதடி

சிறு துளி வெள்ளம் கண்ணில் கரைந்ததடி 

நீ மழலையாய் இருந்த போது வடித்த கண்ணீர் கடலோ ?

விளைவறியாது பூவுலகத்தில் பிறந்த ஒவ்வோர்வரும் காதலிக்கணும். 

கவிதைகள் எழுதினேன் அடி 
உன் கண்களை எழுத முடியவில்லை. 

கண்மூடினாலும் கனவுகள் தோன்றவில்லை 
உன் கண்களே தோன்றுகிறது 

"forgot", "I didn't think you like that",  "let us be friends", "I am sorry. Don't know what actions of me made you think  like that …"… 
ஹா... ஹா... ஹா... 
யாரிடம் டபாய்க்கிறாய் ? மௌனம் சாதிக்கிறாய். 
வானம் பொழிகிறது பூமி விளைகிறது 
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
 ஜோக் அடித்தாயா? 
பாட்டு பாடினாயா?
உன்னை என் அடி காதலித்தேன் அடி?
அல்லது பக்கத்து வீட்டில் 25yrs இருந்தாயா?
பள்ளியில் 14yrs படித்தாயா ? 
Coaching centre'la 2yrs படித்தாயா? 
கல்லூரியில் 4yrs படித்தாயா? 
அல்லது எங்கள் ஆத்து கொலுவிற்கு வந்தாயா?
அல்லது கல்லூரியில் எனக்கு உடம்பு சரி இல்லாத போது சாம்பார் சாதம் கொடுத்தாயா?
அல்லது Chicken Pox போட்ட போது எனக்கு Record Work செய்து Notes சேகரித்து கொடுத்தாயா? 
அல்லது முதல் அலுவகத்தில் ஆட்டு மந்தையாக பத்து கல்லூரியில் இருந்து வந்த பெண்களில் ஒரு பெண்ணாக என்னுடன் Trainingஇல்  வந்தாயா?
அல்லது projectஇல்  late night dinnerஇல் ஒரு medium pizza பகிர்ந்துக் கொண்டாயோ ?
பிறகேனடி உன்னை காதலித்தேன் ?
அல்லது கொஞ்சி கொஞ்சி நான் வயோலின் வாசிக்கும் பொழுது தாளம் போட்டாயோ?  
மாமன் பொண்ணா? அத்தை பெண்ணா? 
ஏனடி காதலித்தேன் 
மௌனத்தால் மனதை திருடிவிட்டாய் அடி. 

நினைவில் கொள் இனி உன் நினைவில் நான் வருவேன் 

என்னுள் இருந்தவன் என்னுள் எங்கிருக்கிறான் ?

மயில் இறகில் எரிமலை தீ குழம்பை தொட்டு வரைந்தானோ உன்னை ... அனல் அடிக்கிறது 

நாடு கடந்து நடுகடல் மேல் நடுவானில் நடுநிசியில் நட்சத்திரங்களை கண்டாலும் நின்னை நினைப்பேன் அடி சகியே!

கண்ணாடியை உடைத்தாலும் உன் முகங்கள் அதிகரித்தன
நீ இல்லை என்று சொன்னாலும் உன் மீது அன்பு கூடுகிறது

உலகம் சிறியது வா என்னுடன் 
இருவரும் சேர்ந்து ஊர் சுற்றலாம் 
சத்திரத்தில் நம் உறவுமுறை கேட்கலாம் 
அவர்களுக்காக தாலி கட்டிக்கொண்டு கலியாணம் செய்து கொள்ளலாம் 
மற்றபடி கலியாணம் என்பது இந்த சமூகத்துக்கு ஒரு ரூபாய் தாள் 

என்ன செய்தேன் உன்னுள் என் மேல் அன்பு மலர்ந்தது? என்றாய்
எதுவும் செய்யவில்லை அடி 
அதை தான் நானும் வியக்கிறேன் 

இதயத்தில் ஓர் ஹிமயமலையை வைத்தேன் அடி
என்னுள் இருந்த ஐம்புலன்களும் செயல் படவில்லை அடி 
அப்படி ஆனால் வையகத்திருக்கு Ra"'வாக நடமாடுபவன் யார்?
  
எனக்கேன் உன்னை படைத்தவன் 
ஏனடி உலகத்தை படைதான்

ஜோவென்று பெய்கிறது மழை 
என் கண் முன் செந்தழல் ஜோதியாய் நீ இருந்தால்
நான் மழையை காண்பேனா என்ன?

அடை மழையிலும் உன் இதய துடிப்பு கேட்கிறது 

மேக கம்பளத்தில் நடந்து நட்சத்திரங்களை எட்டிப்பிடிப்போம், என்னுடன் வா.

சாலையில் நடந்தாலும் சோலையில் நடந்தாலும் சின்ன பெண்ணே அன்று சில்லென்ற மழையில் உன்னுடன் நடந்தது தான் நினைவில் உள்ளதடி!

இருபத்தைந்து ஆண்டுகள் கொண்ட உறக்கப் பழக்கத்தை இருபத்தைந்து மணி நேரத்தில்மாற்றிக்கொண்டேன் இரு இருபத்தைந்து வாரங்கள் பழகிய உன்னை ஒரு மணி நேரம் கூடநினைவில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை! என்ன மாயம் செய்தாய்? 

சந்தித்த பொழுது சிந்திக்கவில்லை 
சிந்திக்கும் பொழுது சந்திக்கவில்லை

உனை காண இரு கண்கள், உன் பேச்சை கேட்க இரு செவிகள், உன் கூந்தலின் மணம் அறிய இரு (மூக்கு)தவாரங்கள், உனை காதலிக்க மட்டும் ஓர் மனம் போதுமா? ஒரு வேளை உன் குழந்தையாக உன்னை நேசிப்பேனோ ? 

மரணத்திடம் மண்டறாடி, என்னை உன் மன மேடையில் சேர்க்கும் படி கேட்பேன்

எப்பவுமே சிரிச்ச முகமா அதுவும் ஐயர் ஆத்து பாஷை பேசும்போது சொக்க்ரா டா

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் என் மேல் வீசுதடி 
குடையில் ஒட்டி கொண்ட முத்துக்கள் உன் மேல் சிந்த வேண்டியவை. என் அடி தடுத்தாய் 
or
முத்துக்கள் உன் குடைமேல் ஒட்டிக்கொண்டுள்ளன. பார்த்துக்கொள் நீ குடையை மடக்கும் பொழுது உன்னை சிறை பிடித்து விட போகிறது 
or
உனை கட்டிக் கொள்ள முத்துக்கள் குடை மேல் காத்திருகின்றன, சற்று எச்சரிக்கையாய் இரு 

வண்ண வண்ணமாய் கண்கள் சிவக்க தலையில் குல்லா போடாமல் சின்னதாய் சொக்காப் போட்டு கொரியா பெண்கள் வந்தாலும் கண்ணே காலமெல்லாம் உன்னுடன் தானடி 

தேனே நான் தென்றலில் நனைந்தேன் அடி, 
புயலாய் என்னைக் கொள்ளை கொள்ளும் நாள் எப்பொழுது ? 

மறக்க மாட்டார்கள் இன்னும் அதிகமாக தான் நேசிப்பார்கள் 

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும் மனதில் இருக்கிறாய் 

தண்ணீரில் அமர்ந்த (வெண்)தாமரையே, சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகள் பின் தும்பி ஆனேன். என் மொட்டே, என் கண் பாராய், உனை கை விட மாட்டேன் அடி 

நான் கலவாண்டாள் அது உன் மனதாய் இருக்கும்

தரணியில் தஞ்சம் புகுந்தவன் நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே!

உனக்காக காத்திருக்கையில் என் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே என்றும் உனை மறவேன் 

அன்பு உன் பண்பு  
வெளிச்சம் உன் முகம் 
வெண்மை உன் மனம்
அழகு உன் கூந்தல்
கொள்ளைஅழகு உன் கண்கள் 
அழகிய வளைவுகள் உன் காதில் 
தந்தம் உன் கைகள் 
அம்பு உன் பார்வை 
மழலை உன் பேச்சு 
மணம் உன் மூச்சு காற்று 
ஒளி உன் மதி
ஒலி உன் கை விரல் சொடுக்கு 
நிலவில் உன் ஓய்வு 
வையகம் உன் காலடி 
நடுநிசி உன் உறக்கம் 
அமைதி உன் நியதி 
கள்ளம் உன் உள்ளம் 
தங்கம் உன் எண்ணம்  
சுருதி உன் மூச்சு
தாளம் உன் இதய துடிப்பு 
தென்றல் உன் பேச்சு 
புயல் உன் சிரிப்பு 
தமிழ் உன் தாய்மொழி
முத்துக்கள் உன் உடன் என் நாட்கள் 
நான் உன் சேவகன்
என் காலம் உன் அருகில் 
உன் உள்ளம் என் பாக்கியம் 
நேற்று உன் சிரிப்பு 
இன்று உன் அமைதி 
நாளை உன்னுடன் நம் வாழ்க்கை 

உன்னை காணும் போது கண்கள் உறைந்தன

நேற்று நினைக்கவில்லை இன்று உன்னை எழுதுவேன் என்று 

நேற்று பிறந்த போது
இன்று சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று சந்தித்த போது
இன்று நினைப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நினைத்த போது
இன்று பழகுவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பழகிய போது
இன்று யாசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று யாசித்த போது
இன்று நேசிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று பயணத்தை தொடங்கிய போது
இன்று உன்னை சந்திப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன் பெயரை கேட்ட போது
இன்று மனத்திலும் உதட்டிலும் முணுமுணுப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உறங்கிய போது
இன்று விழிப்பேன் என 
நினைக்கவில்லை 

நேற்று உன்னுடன் இருந்த போது
இன்று பிரிவேன் என 
நினைக்கவில்லை 

நேற்று நிலவொளியில் உன் நிழலை கண்ட போது
இன்று நித்திரையில் வருவாய் என 
நினைக்கவில்லை 

இன்று நினைத்தேன் 
நாளை மரணத்திலும் உன்னை நினைத்திருப்பேன் என்று 

இரு நிலவில் ஓர் நிலவு இல்லை என்றதும் மற்றோர் நிலவு சிதைந்து நட்சத்திரங்கள் ஆனது
சிறு துளி 
தேன் துளி 
உன் பேச்சு 

தொப்புள்க் கோடி வரை தாய்
அருகில் தோழி
தொலைவில் காதலி 
மடியில் மனைவி 
மார்பில் மகள்!

மிளகாயே! - பார்த்தால் அழகாய் சிவப்பாய் மெலிதாய் இருக்கிறாய் 
கடித்தால் சுளிரென்று உரைக்கிறாய், 
முதலில் சுளிரென்றாலும் பிறகு சுகமாய் உள்ளதடி!

யாரும் பேசாத மொழியினை என்னுடன் பேசுகிறாய்
அர்த்தம் புரியவில்லை 
ஆனால் அதன் சங்கீதம் சுகமாய் இருக்கிறது 

நிசப்தம் என்னும் எட்டாவது ஸ்வரமாய் உன்னை உணர்ந்தேன் 

உன் தேன் சுவை அறிய கூடாது என்பதற்காக தண்ணீரில் அமர்ந்தாய். எறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாக பல உருவம் மாற்றி கொண்டு தேனியாய் ஆனேன் அடி 
மூடிகொண்டு இருக்கும் தாமரை மோட்டே என் கண் பாறை உன்னை கை விடமாட்டேன் 

தண்ணீரில் அமர்ந்தாய் தாமரையே. சிற்றெறும்பு நான் பல்லாயிரம் ஆண்டுகளாய் தும்பி ஆனேன்
என் மொட்டே என் கண் பாராய்
உன்னை கை விடமாட்டேன் 

மேகம் நீ சிந்திய நட்சத்திரங்கள் சில்லென்று என்மேல் வீசுதடி. என்ன சுகம் 

என் களஞ்சியத்தில் ஓர் மாணிக்கம் நீ 

கடமையோ புதுவையில்
வேலையோ சுவோனில்
நினைவோ டில்லியில் 
என் செய்வேன் அடி 

கடல் கடந்து வந்தாலும்
காதல் குறையவில்லை 
கண்மணியே என் நவமணியே 
என் மேல் காதல் கொள்ளடி

பல பெண்களை பார்க்கும் எனக்கு நீ மட்டும்
மனதில் இருக்கிறாய் 
உன்னுடன் கொண்ட பழக்கம் 
கொரியா'வில்லும் தொடர்கிறது - ரயிலில் தூங்கவில்லை 

இரவில் வந்தாலும் பௌர்ணமியாய் வருகிறாய் 

துன்பம் நேர்கையில் நீ துயில்
கொள்ளும் அழகை கண்டால் 
துன்பம் எல்லாம் துண்டு துண்டாகிவிடும்  

என் செவியில் உன் வார்த்தைகள் முத்தமிட்ட போதெல்லாம் என்னை மறந்தேன் 

தரணியில் தஞ்சம் புகுந்தவன் 
நின்னில் நெஞ்சம் தொலைத்தேன் சகியே 

நான் களவாண்டால் அது உன் மனதாய் மட்டும் இருக்கும் 

நித்திரை கலைப்பாளாம்   நித்திரா 
சுயநினைவை களைத்தாய் அடி ஷ்வேதா

உனக்காக காத்திருக்கையில் கால்கள் எல்லாம் ஆலமரமாய் நிற்குதடி 

ஓடையில் நீர் கலங்கினாலும் உன் முகத்தின் பிம்பத்தில் களங்கம் இல்லை  

சிந்தையில் உன் சித்திரம் தீட்டினேன் 
செந்தமிழே உனை மறவேன் அடி 

முத்தத்தை சத்தம் இல்லாமல் கொடுப்பார்கள்
நீ பேசுவதே முத்தமிடுவது போல் உள்ளது 

நீ இருக்கும் பூவுலகை காக்க சிலந்தியாய் வலை பின்னுவேன் அடி 

காதலித்துப்பார் காலம் சிறிது என்று புரியும்

காத்திருந்துப்பார் காதல் எவ்வளவு சுகம் என்று புரியும் 

என் காதலை அறிய என் எழுதுக்கோல் சிந்திய நதியில் பயணம் செய்து பார் 

விண்ணில் நிலவில்லை பெண்ணே உலகில் நீயில்லை 

எவ்வுலகிலும் மழலைகள் நடுவீதியில் கூச்சலிட்டு அடம்பிடிப்பது போல் நீயும் அடம்பிடிக்கிறாய் ஆனால் அமைதியாக 

கலைமானே என் கண் பாரடி 
பட்டாம்பூச்சி என்னில் பற்றுக்கொள்ளடி
தாமரையே என் விரல்கள் பிடித்து தவழடி 
பைங்கிளியே என் மீது பைத்தியம் கொள்ளடி

கலைமானே என் கண் பாரடி 
சுவரில் வரைந்த சித்திரமே என் செவி சாய்ப்பாய் 

ரத்தினமே என் ரகசியமாய் காதலி 
லயமே என்னில் லய்-யடி 

விண்ணே என் முன்னே வா 
தமிழே என் தர்மப்பத்தினியே  

உனக்காக அழமாட்டேன் உன்னுடன் மடிவேன் 

பருவ மழை தொடர்கிறது


மழையே யார் மீது காதல் இப்படி பொழிகிறாய்

ஏ மைனா அந்த நொடி நீ நானென்றால் நான் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பேன் 

தலைவன் கூற்று 

விண் மேகத்தை போர்த்திக் கொள்ள 
போர்வைக்குள்ளே வலதும் 
இடதுமென அலைமோதியது திங்கள் 
மேகம் கலையாதோ திங்கள் தன்னை 
காணாதோ - எண்ணினான் ஞாயிறு 

உன் அருகே நான் மரமாக இருப்பேன். ஏனெனில் உன் நிழல் என்னிழலில் கலக்கும். என் வேர்கள் கால்களடி. உன்னை பின்தொடரும். நம் நிழல்கள் பிரியாது.   

தண்ணீரில் கோலம் போடும் விரல்களை என்ன செய்யலாம் 

நில் கவனி செல் என்று வாகனம் செல்லும் பாதையில் சாலை சந்திப்பு விளக்கை வைத்தான் (வாகனத்தை மனிதன் படைத்தான்).. ஆனால் பாவை பின் செல்லும் மனதிற்கு ஏன் மனதை படைத்தவன் வைக்கவில்லை (ரா" சாலை சந்திப்பில் இருந்து) (Ra" from traffic signal)

சமூத்திரத்தில் மழை பெய்தாலும் உன் முகம் கலங்கவில்லை 

நிலவில் ஹீலியம். காரணம் நீயடி. உன் கால் அடி பட்டு ஹீலியம் உருவாகிற்று 

பேசாமல் கொல்கிறாய். சிரித்தால் சித்தரவதை செய்கிறாய். பேசினால் என்ன ஆவேனோ 

நீ எனக்கு அறிமுகம் ஆகி ஆறாவது மாதம் உன் பற்கள் தெரிந்தன. இப்போது ஓர் ஆண்டு ஆகிறது. இப்பொழுதும் எல்லோரையும் வேற்று மனிதர்களாய் பார்க்கிறாய். ஆனால் என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறாய். ஓர் ஆண்டு  ஆயிற்றே சற்று நன்றாய் பேசுகிறாய் . ஆம் அவ்வப்போது 'ஆம்', 'உம்', 'ஹ்ம்ம்' என்று பேசுகிறாய். நீ (உன்னை) நான் ஈன்றெடுத்த மழலை என்று நினைத்தாயோ ?

நீ குளித்த குளத்தில் பவளத்தாமரைகள்  பார்க்கிறேன். வெண்தாமரைகள்  நாணத்தினால் பவளமாயிட்றோ ?  

உன் நினைவாலே நான் கட்டிய 
தேன் கூட்டை முன் இதயம் 
இருந்த இடத்தில் வைத்தேன்
உன் நினைவாலே வாழ்கிறேன் 

என்ன செய்வதென்று அறியாமால் (எதை) எதையோ செய்கிறேன்

எதிரே அவள் இருக்கையில், எள் அளவும் இமை அசையவில்லை. அவள் காதோடு பேச வேண்டியவற்றை கண்ணோடு பேசுகிறேன்  

நீ கடிக்கும் கரும்பு தன் இனிப்பை உன் பற்கள் இடம் சரணடயவைத்து சமர்பித்தும் விடுகின்றன

வீணை மீட்கும் ஒலியை உன் பற்கள் உரசுவதில் கேட்கிறேன் 

தினமும் முப்பது நாழிகை உன் நிழலை ஆதவன் களவாடுகிறான்... இதனை நீ அறிவாயா? 
(முப்பது நாழிகை - > இரவை கூறினேன்) 

கேள்வி தெரியாமால் விடை தேடுகிறேன் 

காலையில் புத்தகத்தை படித்தாலும் நீ பேசிய வார்த்தைகள் தான் கேட்குதடி

உன் பாத சுவடை கொள்ளை கொள்ள கடலை படைத்தானோ 

சப்பாத்தி மாவுல கொஞ்ஜோண்டு   ஒட்ன மாதிரி ஒரு மூக்க வெச்சுனு  தூங்கறா. தூங்கும் போது கூட அடக்கமா கைய கட்டினு தூங்கறா பாரேன். பாரேன் தூங்கினே அபிநயம் செய்யறா.

மௌனமே உன்னிடம் மௌனம் பழகக் கற்றுக்கொள்ளும். நீ கைக்கட்டி உறங்கினாலும் கடுகளவும் உன் மௌனம் குறையவில்லை . எப்படி பெண்ணே? ஏன் பெண்ணே? 

நான் பேருந்தில் ஏறியவுடன் நித்திரா தேவி ஆக்கிரமிப்பாள் என்று நீ என்னை ஆக்ரமித்தாயோ அன்று முதல் இரவில் கூட அவள் என் அருகில் வருவது இல்லையடி. ஆனால் உன்னை ஏன் இப்பொழுது ஆக்கிரமித்தாள். 

அவள் உள்ளே குளிர்சாதன அறையில் இருக்கிறாள். அந்தி மழை வானம் அர்த்தமில்லாமல் பொழிகிறது.

உணவகத்தில் குடைக்காக காத்திருந்தேன். எனது அருகாமையில் இருந்த ஊழியை என்னுடன் வந்தாள். ஆனால் 'அவள்'உடன் நடப்பது போன்றே எண்ணம். பாதி வழியில் ஊழியையின் 'அவன்' வந்தான். பிறகு தனியே கனவு கண்டுக்கொண்டே சென்றேன் 

மணலின் குற்று: நதியே (நீ செல்லும் பாதை எல்லாம் உன் முன் இருப்பேன்) என்னுடன் என் ஒரு வினாடி கூட நின்று பேசவில்லையே நீ?

முற்பிறவியில் நாம் முத்தம்மிட்டு கொண்ட சுவடுகள் நட்சத்திரங்கள். 

மரணம் சாலையில் சந்தித்தது 
நீ என் மனதில் இருப்பதை 
கண்டு பின் வாங்கியது 
சற்றும் கவலை இல்லையடி

உன்னுடன் உடன் பிறவா நோக்கமென்ன

மின்னும் உன்முகத்தை உனக்கு காண்பிக்க தக தகவென் ஓர் சூரியனை படைத்தான். அது அச்சப்பட்டு ஓரிடத்தில் நிற்காமல் பல நிறங்களில் உருவெடுத்து சுழல்கிறது 

உன் சிரிப்பில் மழலையை கண்டு மதி மயங்கி என் மனத்துக்கண் அகத்தை கண்டேன் 

பெண்ணே உன் மௌனத்தை கண்டு மனம் நர்த்தனம் ஆடுதடி

உன் இரு விரல்களின் இடுக்கில் கன்னத்தின் மழலை சதையை மெதுவாக பிடித்துகொண்டாய். எனக்கு வலிக்குதடி 

கண் கொட்டாமல் பார்க்கிறேன் கவிதை ஏதும் வரவில்லையடி!

என்னை உலகம் வேகமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறது நான் எதிரே உள்ள அலைகடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

என்ன செய்வதென்று அறியாமால் எதை எதையோ செய்கிறேன்

விண்ணில் உன்னுடன் செல்ல ஆசை அடி. உன்னுடனும் வரவும் அனுமதிக்க வில்லை. விண்ணிலும் செல்லவும் சந்தர்ப்பம் தற்பொழுது இல்லையடி. 

மனதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்க யாரும் இங்கு இல்லை 

இலக்கணம் அறியேன் இலக்கியம் அறியேன். ஆனால் சற்று கவிதை மட்டும் வருகிறதடி. அதுவும் உன்னால். 

நான் துயிலில் இருப்பது போல் இருந்த பொழுது நீ "ரா"" என்று என்னை அழைத்தாய். அப்பொழுது, தாய் உறக்கத்தில் இருந்த போது கருவில் இருந்த குழந்தை 'அம்மா' என்று அழைத்த போது அந்த தாய் உணர்ந்த பரவசத்தை உணர்ந்தேன். 

எண்ணில்லா மழை துளிகளில் என் எண்ணத்தை வைத்தேன், மழை துளிகளில் என் எண்ணங்களை வைத்தேன். மழையில் நனையடி. உன் மேல் சிந்தும் முதல் தூல்லிலேயே என்னை உணர்வாய்  

உன் கையில் இருக்கும் இலை என்ன பாக்கியம் செய்ததடி 

நான் இன்று அவளை பிரிவதே அவளுடன் சேர்வதற்கு தான் 

உலகம் என் சூரியனை சுற்றுகிறது? நான் என் உன்னை நினைக்கிறேன்? 

மதுரையிலும் உன் முகம் மறவேன் அடி சகியே 

உனது பெயரை மணலில் எழுதினேன் அலை அள்ளிக்கொண்டது . மனதில் எழுதினேன் குருதியில் கலந்துவிட்டது. என்னுள் எங்கும் நிறைந்துவிட்டாய். 

மல்லிகையின் நறுமணம் உணர முடியவில்லை. ஏன் மனதில் வெள்ளை கமலம் தான் வீசுகிறது 

உன் கண்களில் கோடான கோடி காப்பியங்கள் எழுதி இருந்தால் படித்து முடித்திருப்பேன் அடி .

எட்டுத்தொகையிலும் உன்னை எழுதவில்லை, எண்ணிப் பார்க்கிறேன் அதை ஏன் இப்படி மெச்சி கொள்கிறார்கள் (என்று).

உனக்காக காத்திருக்கையில் மழையும் வெட்பமாய் வீசுகிறது 

உதகைக்கு சென்றாய் உதகை உருகியது. இமயத்திற்கு சென்றாய் இமயம் இடிந்தது. உன் அமைதியை கண்டோ? 

நாம் விட்ட மூச்சு கலந்தது நம் மனம் எப்போது கலப்பது?

புல்லின் கூற்று: மழையில் சிறந்த துளியான உன்னை சிறை பிடித்து 
வெயிலில் மின்ன செய்து மடலாடுவேன்(உன்னை உலகிற்கும் காண்பிப்பேன்) 

சம்பங்கியே நீ படர என்னை கொடுத்தேன் 
என்னில் படர்ந்தாய் என நினைத்தேன் 
ஆனால் என்னை சிறை பிடித்துவிட்டாய் 

சம்பங்கியே உன் நர்தனத்தில் லயிக்கையில் படர்ந்தாய் 
சில நாள் கழித்து உணர்ந்தேன் நான் இவ்வுலகில் இல்லை.
நீ என்னை சிறை பிடித்துவிட்டாய். மீள முடியவில்லை. 
எனினும் உன் அரவணைப்பில் வாழ்வதே பேரானந்தம்

தூங்கறா பாரேன். தோடு மட்டும் ஆடுது 

என்னால் தாங்க முடியவில்லை, பொறுக்கமுடியவில்லை. போதும் பெண்ணே எழுந்திரு. நான் ஒவ்வொரு கணம் பார்க்கையில் வெவ்வேறு கோணத்தில் உறங்குகிறாய். ஒவ்வொன்றிலும் உன்னை என் குழந்தாய் போல் உணர்ந்தேன் அருகில் இருந்து மயில் இறகால் விசிறாமல் போயிற்றே 

எனக்கென்று ஒரு மனம் அவள் இருக்கையை நாடுகையில் 
என் கௌரவம் என்னை தடுக்கிறது 

உண்டதும் உறங்குபவன். உன்னை என்னுள் உணர்ந்த பிறகு எங்கேடி உறக்கம்? 

எண்ணி எண்ணி பார்த்தால் எண்ணங்களில் எல்லாம் நீ தான் டி 

கருவிலே பத்து மாதம். பள்ளியில் பன்னிரண்டு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. கல்லூரியில் நான்கு ஆண்டு. உன்னுடன் மட்டும் வாழ்நாள் முழுவதும்.

உன் முகம் காணாமல் உறக்கமில்லை. நீ இல்லாமல் வாழ்வுண்டோ?

காரணமில்லாமல் கண்மூடித்தனமாய் உன்னை யாசிக்கிறேன் நேசிக்கிறேன்  காதலிக்கிறேன் 

உலகு: நிலவே என்னை உன் நிழல் என நினைத்தாயோ? என்னை பின் தொடர்கிறாய் 

நீ உறங்கும் பொழுது கணக்கில்லா நட்சத்திரங்கள் கண் கொட்டாமல்/இமைக்காமல் உன்னை காவல் காக்கின்றன. ஏனடி ?

உன் புன்சிரிப்பில் புலனைந்தும் புலப்படவில்லை 

தரணியில் தண்ணீர் இல்லையென்றாலும் பரவாயில்லை  
தங்கமே தாமரையே நீ இருந்தால் போதும் 
யாரிடமும் தோன்றவில்லை 
பலருடன் தோன்றிய உடன் மடிந்த காதல் 
உன்னுடன் உனக்காக மலர்ந்தது 

கண் முன்னும் நீ 
கண் மூடினாலும் நீ 
கண்ணே என் கண்ணா நீ 

விதைக்குள் விருட்சம் 
என்னுள் நீ 

"தீக்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா  நந்தலாலா" என்றான் "பாரதி". பொய்யடி உன்னை நெருங்கவே முடியாது 

தேய்ந்தாலும் நிலா அழகு தான் 

நொடியில் ஓர் கவிதை என்றால் உன் சிரிப்பு 

உன் வேர்வை என்ன பனி கட்டியில் இருந்து வடிந்த துளியோ? இப்படி சுடுகிறது 
(when I placed my hand on bus window in which she placed her hand, after she got down)

சொல்லில் குற்றமோ 
சொல்லிய விதத்தில் குற்றமோ 
பொருளில் குற்றமோ 
கூறியவனில் குற்றமோ 

பிரிந்த சாலைகள் மறுபடியும் ஓர் இடத்தில் ஒன்று சேரும் 

மின்சாரமாய் உடம்பில் ஒவ்வொரு அணுவாய் ஓடுகிறாய். வீட்டில் மின்சாரம் இருந்தும் துயில் இல்லையடி