உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 1, 2011

பேரமைதி

நம்ம ரசிச்சு ரசிச்சு நேசிச்ச பொண்ணு
நம்மகிட்ட முகம் கொடுத்த பேசலானா
அந்த வலி இருக்கே, நம்மள பொறட்டி எடுத்துரும்
வேலை இல்லனா வீட்டுக்கு போய் தூங்க பிடிக்காது,
யார்கிட்டயும் பேச பிடிக்காது,
அப்படியே போன்'ல பேசினா ரெண்டு நிமிஷத்துல
போன்'எ வைக்க தோனும்,
நண்பன், நண்பன் டா'னு - இப்ப நீ தான் டா முடிவு எடுக்கணும்,
வேலைய பாத்துனு போ'னு சொன்னா,
மனசு சுத்தமா காதுல வாங்காது, போடான்னு சொல்லும்,
இந்த விஷயம் தெரிஞ்ச நட்பு வட்டாரத்துக்கு கிட்ட
இத பத்தி ரொம்ப கேள்வி கேக்காதனு சொல்லிடும்
மூனு மாடிய பதினச்சு வினாடில ஏறுகிறவன்
பொறுமையா மூச்சு விட்டுன்னு தலைய தொங்கப் போட்டு
பாதி கால் வெச்சு ஒரு ஒரு படியா ஏறுவான்
என்ன ஆனாலும் அவ மேல கோவம் மட்டும் வரல
இன்னும் அழகா இருக்கா மனசு நிறையா இருக்கா

என் வலி என்னோட இருக்கட்டும் எனக்கு இது புடிச்சிருக்கு

என் கண் பாரடி கிளியே
என் கண் பாரடி கிளியே
என் மீது ஏன் கோபம் கொண்டாயோ
ஏன் மறுத்தாயோ
எண்ணி பார்த்தால்
எள்ளளவும் தோன்றவில்லை
என் ஏழுலகமும் நீ தான் அடி!
என்றும் உன்னை மறவேன் அடி
என் கண் பாரடி கிளியே !

துயிலிலும் துள்ளி துள்ளி வரவில்லை
நேரிலும் தள்ளி தள்ளி செல்கிறாய்

நிலவில் என்னை நினைத்துக்கொள்
மண்ணில் என்னை மணந்துக்கொள் அல்லது
என் மரணத்தில் என்னை மண்ணித்துவிடு