உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Dec 31, 2013

Dec 2013

மார்கழி மாத மாலையில்
கடற்கறை மணல் வெ ​ளியில்
லேசான மழைப் பெய்ந்து ஓய்ந்து
முழுப் பௌர்ணமி நிலவில்
கடல் வெள்ளிப் பாகாய் மினுமினுக்க
வலது பக்கம் நீ இருக்க
என் மன​மெல்லாம்​ ஒளி வீச

அலையொலியிலும் உன்
பேச்சொலி மட்டுமென் காதில் விழ
யாரை நோக்குவேன்
மிருதுவான ஈர மணலில் ஒவியம்
செதுக்கும் உன் பாதங்களைப் போல
என் மனதில் கவிதையை செதுக்கும்
உன் முகம் தனையே கண்ணே